பின்லேடன் கொல்லப்பட்ட நகரில் கத்தோலிக்கர் தங்கள் மத நடவடிக்கைகளைக் குறைத்துள்ளனர்
மே03,2011. பாகிஸ்தானின் வடக்கிலுள்ள நகரமான Abbottabad ல் அல்கெய்தா அமைப்பின் தலைவர்
பின்லேடன் அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படையினால் கொல்லப்பட்ட பின்னர் அந்நகரத்தில் இருக்கின்ற
சிறிய கத்தோலிக்கப் பங்குத்தளம் தனது சமய நடவடிக்கைகளைக் குறைத்துக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்க
ஐக்கிய நாட்டு நியுயார்க் வர்த்தக மையம் செப்டம்பர் 11ம் தேதி தரைமட்டமாக்கப்பட்ட பயங்கரவாதத்
தாக்குதல் உட்பட பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட பின்லேடன்
கொல்லப்பட்டதையடுத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று பங்குக்குரு
Akram Javed Gill கூறினார். வடக்கு மலைப்பகுதிகளுக்கு நுழைவாயிலாக அமைந்துள்ள Abbotabbad
நகரில் 2007ம் ஆண்டிலிருந்து பங்குக்குருவாக இருக்கிறார் அருட்பணி ஜில்.