2011-05-02 16:08:13

திருத்தந்தை 16ம் பெனடிக்ட், போலந்து அரசுத்தலைவர் சந்திப்பு


மே02,2011. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டது குறித்து இத்திங்கள் காலை திருத்தந்தை 16ம் பெனடிக்டை சந்தித்து போலந்து நாட்டின் சார்பாகத் தனது நன்றியைத் தெரிவித்தார் போலந்து அரசுத்தலைவர் Bronisław Komorowski.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறன்று நடைபெற்ற பெருவிழாத் திருப்பலியில் கலந்து கொண்ட போலந்து அரசுத்தலைவர் Komorowski, நீண்ட காலம் பாப்பிறைப் பணி செய்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், போலந்துக்கு மட்டுமல்லாமல், இந்த உலகம் முழுவதிற்கும் ஒரு திருப்புமுனையாக இருக்கிறார் என்பது எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும் என்றும் கூறினார்.
மனித மாண்பு, மனிதனின் தவிக்க முடியாத உரிமை ஆகியவற்றுக்கு ஆதரவான அவரது நடவடிக்கைகளும் அவரது அதிகாரப்பூர்வ ஆசிரிய வெளியீடுகளும் இன்றையக் காலத்திற்கு மட்டுமல்லாமல், வருங்காலத்திற்கும் உகந்தனவாக இருக்கின்றன என்றும் போலந்து அரசுத்தலைவர் கூறினார்.
இஞ்ஞாயிறு திருப்பலியில் சுமார் 15 இலட்சம் பேர் கலந்து கொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.