2011-05-02 16:07:36

ஒவ்வொரு நிகழ்வும் பகமையை அல்ல அமைதியை வளர்ப்பதை நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும்.


மே 02, 2011. பிறரின் மரணம் குறித்து கிறிஸ்தவர்கள் மகிழ்வதில்லை எனினும் மரணம் என்பது நாம் இறைவன் மற்றும் மனிதர் முன்னிலையில் நமக்கிருக்கும் பொறுப்புணர்வைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது என்றார் திருப்பீடப் பேச்சாளர் குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.
அல் கொய்தா இயக்கத் தலைவர் ஓசாமா பின் லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டது குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த திருப்பீடப்பேச்சாளர், மக்களிடையே பகைமையையும் பிரிவினைகளையும் பரப்பியதிலும், அதன் வழி எண்ணற்ற மக்களின் உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்ததிலும், இதற்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்தியதிலும் பின்லேடனின் இடம் குறித்து அனைவருக்கும் தெரிந்த ஒன்றே எனவும் கூறினார்.
பிறரின் மரணத்தில் கிறிஸ்தவர்கள் மகிழ்வதில்லை என்ற இயேசு சபை குரு லொம்பார்தி, உலகின் ஒவ்வொரு நிகழ்வும் பகைமையை வளர்ப்பதற்கான நோக்கம் கொண்டிராமல் அமைதியை ஊக்குவிப்பதற்காக இருக்க வேண்டும் என்ற கிறிஸ்தவர்களின் நம்பிக்கையையும் சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.