2011-04-30 15:50:08

மெக்சிகோவில் ஐம்பதாயிரம் இளையோர் அமைதிக்காகச் செபம்


ஏப்ரல்30,2011. இஞ்ஞாயிறன்று மெக்சிகோவில் சுமார் ஐம்பதாயிரம் இளையோர் கூடி அமைதிக்காகச் செபிக்கவிருக்கின்றனர் என்று மெக்சிகோ நகர் உலக வணிக மையத்தில் நடைபெற்ற நிருபர் கூட்டத்தில் அறிவித்தார் இறைவார்த்தைப் பணியாளர் நிறுவனர் அருட்பணி Luis Butera Vullo.
மெக்சிகோ நாடு, மிகவும் கஷ்டமான காலத்தில் சென்று கொண்டிருக்கின்றது என்றும், அந்நாட்டுச் சமுதாயத்தின் எல்லா நிலைகளிலும் வன்முறை ஓங்கியிருக்கின்றது என்றும் கூறினார் குரு Butera.
பணத்தின் மீதான ஆசை மனித இதயங்களைக் கடினப்படுத்தியிருக்கின்றது என்ற அவர்,
அமைதிக்காகச் செபிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது என்றும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.