நைஜீரிய வன்முறைக்கு ஊழல் அரசியல் தலைவர்கள் முக்கிய காரணம் - ஆயர் கண்டனம்
ஏப்ரல்29,2011. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த வாரத்தில் இடம் பெற்ற வன்முறையில்
குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டிருக்கும் வேளை, அவ்வன்முறையில் ஊழல் அரசியல் தலைவர்கள்
முக்கிய பங்காற்றியுள்ளனர் என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் குறை கூறினார். வடக்கு நைஜீரியாவின்
சில மாநிலங்களில் இடம் பெற்ற அறிவில்லா வன்முறைகளும், கொலைகளும், அழிவுகளும் அந்நாட்டை
தொடர்ந்து ஊழலில் வைத்திருக்கும் மக்களாலும் சக்திகளாலும் ஏற்பட்டன என்று ஓயோ ஆயர் Emmanuel
Ade Badejo கூறினார். நைஜீரியாவில் வன்முறையால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்ட Kaduna,
Bauchi ஆகிய மாநிலங்கள் தவிர பிற இடங்களில் இச்செவ்வாயன்று மாநில ஆளுனர்கள் தேர்தல்கள்
நடத்தப்பட்டன. இவ்வன்முறையால் ஏறக்குறைய நாற்பதாயிரம் பேர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.