2011-04-28 15:56:52

6. இறைவனின் அருளோடு கிறிஸ்தவர்கள் ஈராக்கில் ஒப்புரவை வளர்க்க முடியும் - தலத் திருச்சபை ஆயர்


ஏப்ரல் 28,2011. கிறிஸ்துவின் மரணம் உயிர்ப்பு இவைகளின் வழியே உலகைத் தம்மோடு ஒப்புரவாக்கிய இறைவனின் அருளோடு கிறிஸ்தவர்களும் ஈராக் நாட்டில் ஒப்புரவை வளர்க்க முடியும் என்று ஈராக் தலத் திருச்சபை ஆயர் ஒருவர் கூறினார்.
Aid to Church in Need என்ற அமைப்பிற்கு இச்செவ்வாயன்று பேட்டியளித்த Erbil உயர் மறைமாவட்டப் பேராயர் Bashar Warda ஈராக்கில் தொடரும் வன்முறைகளால் புனித வாரத் திருச்சடங்குகள் பல நிறுத்தப்பட்டதைச் சுட்டிக் காட்டினார்.
ஈராக்கில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான பல வன்முறைகளைக் கண்ட Mosul பகுதியில் விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தையும் மீறி, மக்கள் பல மைல் தூரம் நடந்து புனித வெள்ளித் திருச்சடங்குகளில் கலந்து கொண்டனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.ஈராக் அரசு விரும்பினால், அந்நாட்டில் உள்ள கிறிஸ்தவர்கள் ஒப்புரவை வளர்க்க பல வழிகளிலும் உதவ முடியும் என்று பேராயர் Warda தன் நம்பிக்கையை வெளியிட்டார்.







All the contents on this site are copyrighted ©.