திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் DVD குறுந்தகடுகள்
இலங்கையில் அமோக விற்பனையாகி வருகின்றன
ஏப்ரல் 26,2011: இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் வருகிற மே ஒன்றாந்தேதி முத்திப்பேறு
பெற்ற நிலைக்கு உயர்த்தப்படவிருக்கும் வேளை அவரது வாழ்க்கையைச் சித்தரிக்கும் DVD குறுந்தகடுகள்
இலங்கையில் அமோக விற்பனையாகி வருகின்றன என்று ஊடகங்கள் கூறுகின்றன. 1995ம் ஆண்டு சனவரியில்
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இலங்கைக்குத் திருப்பயணம் மேற்கொண்டதை பலர் நினைவுகூருகிறார்கள்
என்றும் கூறப்படுகிறது. “இலங்கையின் அப்போஸ்தலர்” என அழைக்கப்படும் அருள்திரு ஜோசப்
வாஸ் அவர்களையும் அச்சமயத்தில் கொழும்புவில் முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தினார்
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால். 2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி இறைபதம் எய்திய திருத்தந்தை
இரண்டாம் ஜான் பால் சுமார் 27 வருடங்கள் பாப்பிறையாகப் பணியில் இருந்தார்