2011-04-26 15:09:07

ஐ.நா.தூதர் : மலேரியா இறப்புக்களைத் தடுத்து நிறுத்த முடியும்


ஏப்ரல் 26,2011: ஆப்ரிக்காவில் மலேரியா நோயைக் கட்டுபடுத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் அக்கண்டத்தின் 11 நாடுகளில் மிகுந்த பலனைக் கொடுத்திருக்கின்றன என்றும் மலேரியாவால் ஏற்படும் இறப்புக்களில் ஐம்பது விழுக்காடு குறைந்துள்ளது என்றும் ஐ.நா.தூதர் Ray Chambers தெரிவித்தார்.
உலகில் மலேரியாவால் ஏற்படும் இறப்புக்களே இல்லை என்ற நிலையை 2015ம் ஆண்டுக்குள் எட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் Ray Chambers இத்திங்களன்று கூறினார்.
இத்திங்களன்று கடைபிடிக்கப்பட்ட அனைத்துலக மலேரியா தினத்திற்குச் செய்தி வெளியிட்ட பான் கி மூன், 2008ம் ஆண்டிலிருந்து அறுபது கோடிக்கு மேற்பட்ட ஆப்ரிக்கர்களை மலேரியாவிலிருந்து காப்பாற்ற முடிந்துள்ளது என்றார்.
கொசுக்களால் பரவும் மலேரியாவால் ஓராண்டில் ஏழு இலட்சத்து 81 ஆயிரம் பேர் இறக்கின்றனர் என்றும் தடுத்து நிறுத்தக்கூடிய மற்றும் சிகிச்சை அளிக்கப்படக்கூடிய இந்நோயால் இறப்பவர்களில் பலர் இளம் சிறார் என்றும் பாந் கி மூன் தெரிவித்தார்.
ஆப்ரிக்காவில் முப்பது கோடிக்கு அதிகமான கொசுவலைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.