2011-04-25 14:45:05

சைனாவில் கிறிஸ்து உயிர்ப்பு வழிபாட்டை நிறைவேற்ற முயன்ற கிறிஸ்தவர்கள் கைது.


ஏப்ரல் 25, 2011. சைனாவில் கிறிஸ்து உயிர்ப்பு வழிபாட்டை வெளிஅரங்கில் நிறைவேற்ற முயன்ற கிறிஸ்தவர்களைத் தடைசெய்ததுடன் அவர்களை விசாரணைக்கென காவல்நிலையம் எடுத்துச் சென்றுள்ளது அந்நாட்டு காவல்துறை. சைனாவில் அரசால் அங்கீகரிக்கப்படாமல் மறைந்து வாழும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ள கிறிஸ்தவ சபைகளுள் ஒன்றான இந்த Shouwang எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையின் பாடகர் குழுவும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளது.இக்கிறிஸ்தவசபையின் தலைவர்கள் எவரும் கடந்த இரு வாரங்களாக வீட்டை விட்டு வெளியேறவும் காவல்துறையால் அனுமதிக்கப்படவில்லை. சைன அரசின் அங்கீகாரம் பெற்ற கிறிஸ்தவ சபையில் 2கோடி அங்கத்தினர்கள் இருக்கும் வேளை, சைனாவின் கத்தோலிக்கத் திருச்சபை உட்பட, மறைந்து வாழும் கிறிஸ்தவ சபைகளில் 5கோடி அங்கத்தினர்கள் வரை உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.