2011-04-18 14:20:24

மத்ரித் உலக இளையோர் தினத்தில் பங்கு பெற திருத்தந்தை அழைப்பு


ஏப்ரல் 18,2011. ஞாயிறு திருப்பலியின் இறுதியில் திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரையில், வருகிற ஆகஸ்டில் மத்ரித்தில் நடைபெற இருக்கும் உலக இளையோர் தினத்தில் பங்கு கொள்ளுமாறு எல்லாருக்கும் அழைப்பு விடுத்தார்.
“இயேசு கிறிஸ்துவில் நடப்பட்டு கட்டப்படுவீர்கள், விசுவாசத்தில் உறுதியாக இருங்கள்” என்ற இந்த இளையோர் தினக் கருப்பொருள் பற்றியும் குறிப்பிட்ட அவர், மத்ரித்தில் நாம் சந்திக்கும்வரை கடவுளுக்குப் பிரியமுள்ளவர்களாக நடந்து கொள்ளுங்கள் என்றார்.
பல மொழிகளில் இவ்வழைப்பை முன்வைத்த திருத்தந்தை, உள்ளார்ந்த அமைதியில் கடவுளின் குரலுக்குச் செவிமடுக்கவும், தூய இதயத்தோடு பிறரை நோக்கவும் அன்னை மரியாவிடமிருந்து கற்றுக் கொள்ளவும் கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.