2011-04-18 14:22:10

சர்க்கசில் குழந்தைத் தொழிலாளர்களுக்கு தடை.


ஏப்ரல் 18, 2011. சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் குழந்தைத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தவும், அவர்களை வைத்து சாகச நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டவும் இந்திய உச்ச நீதி மன்றம் தடை விதித்துள்ளது.
இத்தடை உத்தரவை இத்திங்களன்று வழங்கிய உச்ச நீதி மன்றம், ஏற்கனவே சர்க்கசில் பணியமர்த்தப்பட்டுள்ள சிறார்கள், அங்கிருந்து மீட்கப்பட்டு அவர்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் துவக்கப்படவேண்டும் என அரசுக்கு ஆணை பிறப்பித்துள்ளது.
14 வயதிற்குட்பட்ட சிறார் பணியில் அமர்த்தப்படுவதை இந்திய சட்டம் தடைச்செய்கின்ற போதிலும், சர்க்கசில் பணிபுரிவதற்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரை அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.