2011-04-18 14:21:53

ஏழ்மையை ஒழிப்பதில் இந்தியா அபார முன்னேற்றம், உலக வங்கி பாராட்டு


ஏப்ரல் 18, 2011. உலகில் வளர்ந்து வரும் நாடுகளில், மூன்றில் இரண்டு பங்கு நாடுகள், ஏழ்மை மற்றும் பட்டினியை நன்றாகச் சமாளித்து, வளர்ச்சி இலக்கை அடைந்து வருகின்றன. இதில், இந்தியாவும் ஒன்று என, உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளன.
உலகில் வளர்ந்து வரும் நாடுகளில் ஏழ்மை மற்றும் பட்டினியை நன்றாகச் சமாளித்து, வளர்ச்சி இலக்கை அடைந்து வரும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் ஏழ்மையை ஒழிப்பதில் அபார முன்னேற்றம் கண்டுள்ளதுடன், மேம்பட்ட பொருளாதார கொள்கைகள், விரைவான வளர்ச்சிகளால், 2015ம் ஆண்டிற்குள் அவை இன்னும் மேம்பட்ட வளர்ச்சியைப் பெறும் என உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகில் ஒரு நாளைக்கு 56 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில் வசிப்பவர்களின் எண்ணிக்கை, 2015ல், 88 கோடியே 30 இலட்சமாக இருக்கும். இதுவே, 2005ல், 140 கோடியாகவும், 1990ல், 180 கோடியாகவும் இருந்தது.








All the contents on this site are copyrighted ©.