வடகொரியாவில் 50 ஆயிரத்துக்கு அதிகமான கிறிஸ்தவர்கள் சிறைகளில் உள்ளனர்
ஏப்ரல்16,2011 : வடகொரியாவில் தங்களது விசுவாசத்திற்காக 50 ஆயிரத்துக்கு அதிகமான கிறிஸ்தவர்கள்
சிறைகளில் இருப்பதாக அண்மையில் வெளியான ஒரு புள்ளி விபரம் அறிவித்துள்ளது. வடகொரியாவில்
சாதாரண நீதித்துறை அமைப்பைத் தவிர அதற்கு இணையான நீதித்துறை அமைப்பும் இயங்குகின்றது
என்றும் இது குற்றம் சாட்டப்பட்டவரின் மனுக்களை மதிப்பதில்லை என்றும் கூறப்படுகின்றது.
உலகில் சமய மற்றும் மனசாட்சியின் சுதந்திரம் குறித்து ஆய்வு செய்யும் "Open Doors"
என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், அந்நாட்டில் மனித உரிமைகள் நசுக்கப்படுகின்றன மற்றும்
சமய சுதந்திரம் மறுக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இத்தனை அடக்குமுறைகளுக்கு
மத்தியிலும் வடகொரியாவில் சுமார் நான்கு இலட்சம் கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். இவர்கள்
மொத்த மக்கள்தொகையில் சுமார் 2 விழுக்காடு என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.