பொலிவியாவில் 20 இலட்சம் குழந்தைகள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர்
ஏப்ரல் 13, 2011. பொலிவியா நாட்டில் 20 இலட்சம் குழந்தைகள் வறுமைக் கோட்டிற்குக் கீழ்
வாழ்கின்றனர் என்றும், இவர்களில் 3,30,000 குழந்தைகள் தெருவோரக் குழந்தைகள் என்றும் அந்நாட்டில்
வெளியான ஓர் அறிக்கை கூறுகிறது. ஏப்ரல் மாதம் 12ம் தேதி பொலிவியாவில் கொண்டாடப்படும்
குழந்தைகள் தினத்தையொட்டி, இச்செவ்வாயன்று La Paz என்ற செய்தித் தாளில் இவ்வறிக்கை வெளியானது. பொலிவியாவின்
மக்கள் தொகையில் 46 விழுக்காட்டினர் குழந்தைகள் என்றும், இவர்களில் வறுமைக் கோட்டிற்குக்
கீழ் வாழும் 20 இலட்சம் குழந்தைகள் அந்நாட்டின் மக்கள் தொகையில் 20 விழுக்காட்டினர் என்றும்
இவ்வறிக்கை கூறுகிறது.குற்றவாளிகளாகச் சிறையில் இருக்கும் பல பெற்றோர் வேறு யார் கண்காணிப்பிலும்
தங்கள் குழந்தைகளை விட முடியாததால், இக்குழந்தைகளையும் தங்களுடன் சிறைக்கு அழைத்துச்
செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.