திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் திருவிழா போலந்திலும் உரோம் நகரிலும் அக்டோபர் 22ந்தேதி
சிறப்பிக்கப்படும்.
ஏப்ரல் 12, 2011. மேமாதம் முதல் தேதி அருளாளராக திருச்சபையில் அறிவிக்கப்பட உள்ள திருத்தந்தை
இரண்டாம் ஜான் பாலின் திருவிழா போலந்து நாட்டிலும் உரோம் நகரிலும் அக்டோபர் 22ந்தேதி
சிறப்பிக்கப்படும் என திருப்பீடம் அறிவித்துள்ளது. திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின்
அருளாளர் பட்டமளிப்பு விழாவிற்கான நன்றித்திருப்பலி உலகம் முழுவதும் ஒராண்டு காலத்திற்குள்
எந்த நாளிலும் நிறைவேற்றப்படலாம் என்ற அனுமதியுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வழிபாடு
மற்றும் அருளடையாளங்களுக்கான திருப்பேராயம், அக்டோபர் 22ந்தேதியை அருளாளர் திருத்தந்தை
இரண்டாம் ஜான் பாலிற்கென திருவழிபாட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நாளாக போலந்து திருச்சபையும்
உரோமை மறைமாவட்டமும் மட்டுமே கொண்டிருக்கும் என அறிவித்துள்ளது. இதே நாளில் அவ்விழாவைச்
சிறப்பிப்பதற்கும் மற்றும் அவர் பெயரால் கோவில்களை, பங்குதளங்களை அர்ப்பணிப்பதற்கும்
விரும்பும் ஏனைய மறை மாவட்டங்கள், திருப்பீடத்தின் சிறப்பு அனுமதி பெறவேண்டும் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.