2011-04-08 16:03:57

சூடான் மக்கள் அமைதிக் கலாச்சாரத்தைத் தழுவிக் கொள்ளுமாறு ஆயர்கள் வேண்டுகோள்


ஏப்ரல் 08,2011. தென் சூடான் என்ற புதிய நாடு உருவாகும் காலம் நெருங்கி வரும்வேளை, அந்நாட்டு மக்கள் வன்முறையை ஒதுக்கி அமைதிக் கலாச்சாரத்தைத் தழுவிக் கொள்ளுமாறு சூடான் கத்தோலிக்க ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வருகிற ஜூலை 9ம் தேதியன்று தென் சூடான் தனிநாடு என அறிவிப்பதற்கானத் தயாரிப்புக்கள் இடம் பெற்று வரும்வேளை, தென் சூடான் தலைநகர் Juba வில் கூட்டம் நடத்தி வரும் ஆயர்கள் இவ்வேண்டுகோளை முன்வைத்தனர்.
உண்மையில் இரண்டு புதிய நாடுகள் உருவாக இருக்கும் இந்தச் சூழலில் அனைத்துக் குடிமக்களும், அரசியல் கட்சிகளும் ஆயுதம் தாங்கிய குழுக்களும் பொறுமை, புரிந்து கொள்ளுதல், கட்டுப்பாடு ஆகிய பண்புகளைக் கடைபிடிக்குமாறு கேட்டுள்ளனர் ஆயர்கள்.
கடந்த சனவரியில் நடைபெற்ற பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பில் 98 விழுக்காட்டு மக்கள் தென் சூடான் தனி நாடாக அமைவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.







All the contents on this site are copyrighted ©.