லிபியாவில் முழு அமைதி நிலவ திருத்தந்தை விடுத்த அழைப்பிற்கு Tripoli
அப்போஸ்தலிக்க நிர்வாகியின் நன்றி
ஏப்ரல் 07,2011. லிபியா மற்றும் ஐவரி கோஸ்ட் பகுதிகளில் முழு அமைதி நிலவ திருத்தந்தை
இப்புதன் பொது மறைபோதகத்தின்போது விடுத்த அழைப்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார் Tripoliயின்
அப்போஸ்தலிக்க நிர்வாகியான ஆயர் Giovanni Innocenzo Martinelli. ஆயுதங்களை விடுத்து,
அரசியல் முறைகளில் தீர்வு காண்பதற்கு திருத்தந்தை விடுத்துள்ள இந்த அழைப்பும், செபங்களும்,
ஒரு உந்து சக்தியாக உள்ளதென்று ஆயர் Martinelli எடுத்துரைத்தார். இதற்கிடையே, ஐவரி
கோஸ்டில் தொடரும் வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது அப்பாவி பொது மக்களே என்று
அந்நாட்டிற்கான திருப்பீடத் தூதர் பேராயர் Ambrose Madtha கூறினார்.வன்முறைகளுக்குப்
பயந்து மக்கள் தங்களுக்குள்ள அனைத்தையும் விட்டு விட்டு, கோவில்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்
என்று கூறிய பேராயர், இவர்களுக்கு, உணவு, குடிநீர், மருந்துகள் ஆகிய பல்வேறு அடிப்படைத்
தேவைகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன என்று கூறினார்.