மெக்சிகோவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமற்போயுள்ளனர்
ஏப்ரல் 05,2011. மெக்சிகோ நாட்டில் 2006ம் ஆண்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமற்போயுள்ளனர்
என்று CNDH என்ற அந்நாட்டு மனித உரிமைகள் நிறுவனம் அறிவித்தது. மெக்சிகோ அரசுத் தலைவர்
Felipe Calderon, அந்நாட்டில் போதைப்பொருள் வியாபாரத்தைத் தடுப்பதற்கு கடும் நடவடிக்கைகளை
அறிவித்ததற்குப் பின்னர் 5,397 பேர் காணாமற்போயுள்ளனர் என்று CNDH நிறுவனம் அறிவித்தது.
இவர்களில் 3,457 பேர் ஆண்கள் மற்றும் 1,885 பேர் பெண்கள்