2011-04-05 15:26:25

நிலக்கண்ணி வெடிகள் உடன்பாட்டிற்கு நாடுகள் பணிந்து நடக்க வேண்டும் - பான் கி மூன்


ஏப்ரல் 05,2011. நிலக்கண்ணி வெடிகளைப் பயன்படுத்துதல், அவற்றை சேமித்து வைத்தல் ஆகியவை குறித்த அனைத்துல உடன்பாட்டிற்கு நாடுகள் ஒத்திணங்க வேண்டுமென்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
ஏப்ரல் 4, இத்திங்களன்று கடைபிடிக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகள் குறித்த விழிப்புணர்வு நாளையொட்டி இவ்வாறு வலியுறுத்திய பான் கி மூன், இவ்வுடன்பாட்டை 55 நாடுகள் அமல்படுத்தியுள்ளன என்றும் மேலும் 99 நாடுகள் இவ்வெடிகளால் ஊனமுற்ற மக்களின் உரிமைகள் குறித்துச் சொல்லப்பட்டுள்ள கூறுகளைச் செயல்படுத்துகின்றன என்றும் கூறினார்.
கடந்த ஆண்டில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நிலக்கண்ணி வெடிகள் குறித்த விழிப்புணர்வுக் கல்வி வழங்கப்பட்டதையும் பான் கி மூன் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் சண்டையின் போது புதைக்கப்பட்ட பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட நிலக்கண்ணி வெடிகளை அழிக்கும் பணிகளில் 14,400 பேர் ஈடுபட்டுள்ளனர் என்றார் அவர்.







All the contents on this site are copyrighted ©.