2011-04-05 15:23:29

தென் கொரிய சமயத் தலைவர்கள் வட கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு அரசிடம் விண்ணப்பம்


ஏப்ரல்05,2011. தென் கொரிய சமயத்தலைவர்கள் வட கொரியாவுக்கு விரைவில் பயணம் மேற்கொள்வதற்குத் தென் கொரிய அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
Kwangju கத்தோலிக்க உயர்மறைமாவட்ட பேராயர் Hyginus Kim Hee-joong உட்பட KCRP என்ற கொரிய சமய மற்றும் அமைதி அவையின் ஏழு பிரதிநிதிகள், தென் கொரிய அமைச்சர் Hyun In-taek ஐச் சந்தித்து இந்தத் தங்களது கோரிக்கையை சமர்ப்பித்தனர்.
கொரிய தீபகற்பத்தில் அமைதியும் பாதுகாப்பும் ஏற்படுவதற்கு வட கொரிய அரசு மற்றும் வட கொரிய விசுவாசிகள் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தாங்கள் வலியுறுத்தவிருப்பதாகவும் இப்பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
KCRP அமைப்பு, புத்தம், கத்தோலிக்கம், கன்ஃபூசியம், புரோட்டஸ்டாண்ட், கொரியப் பூர்வீக மதங்கள், கொரியாவில் தொடங்கப்பட்ட Chondogyo மற்றும் Won-Buddhism ஆகியவற்றை உள்ளடக்கியது.







All the contents on this site are copyrighted ©.