ஆப்ரிக்காவை முன்னேற்றும் முயற்சிகளுக்கு ஜெர்மன் அரசுத் தலைவர் ஆதரவு வழங்குமாறு ஆப்ரிக்க
ஆயர்கள் கோரிக்கை
ஏப்ரல்05,2011.ஆப்ரிக்கக் கண்டத்தை முன்னேற்றும் தங்களது முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குமாறு
ஜெர்மன் அரசுத்தலைவர் Christian Wulff ஐக் கேட்டுள்ளனர் ஆப்ரிக்க ஆயர்கள். தற்போது
வட ஆப்ரிக்கா மற்றும் ஐவரி கோஸ்டில் இடம் பெற்று வரும் வன்முறைகள் பற்றிக் குறிப்பிட்டுப்
பேசிய ஆப்ரிக்க மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவரான கர்தினால் Polycarp
Pengo, ஆப்ரிக்கக் கண்டத்தை முன்னேற்றுவதன் மூலம் ஐரோப்பாவில் குடியேறும் ஆப்ரி்க்கர்களின்
எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்றும் கூறினார். பெர்லினில் ஜெர்மன் நாட்டு ஆயர்களுடன்
நடத்திய அண்மைக் கூட்டத்தில் இவ்வாறு உரைத்த டான்சானியா நாட்டு Dar es Salaam கர்தினால்
Pengo, ஐரோப்பிய அரசுகள், ஆப்ரிக்கக் குடியேற்றதாரர்களை அச்சுறுத்தலாக நோக்காமல், சக
மனிதர்களாக நோக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆப்ரிக்கக் குடியேற்றதாரர்களுக்கு வாய்ப்புக்கள்
வழங்கப்பட்டால் தங்கள் திறமையை நன்கு வெளிப்படுத்துவார்கள் என்றும் அவர் கூறினார். இதற்கிடையே,
லிபியாவில் தொடர்ந்து இடம் பெற்று வரும் வன்முறைகளால் வெளியேறி வரும் ஆப்ரிக்க அகதிகள்
குறித்து ஐரோப்பிய சமுதாய அவை நாடுகள் மிகுந்த கவலை கொண்டுள்ளன. இத்தாலியின் Lampedusa
தீவில் Tunisia விலிருந்து ஏற்கனவே வந்த வட ஆப்ரிக்க அகதிகள் 20 ஆயிரம் பேர் இருக்கின்றனர்.
தற்சமயம் லிபியாவிலிருந்தும் அகதிகள் வந்து கொண்டிருக்கின்றனர்