2011-04-04 09:54:25

“இறையடியார் திருத்தந்தை 2ம் ஜான் பாலும் பல்சமய உரையாடலும்”


ஏப்ரல் 03,2011. அன்பு நெஞ்சங்களே, இறையடியார் திருத்தந்தை 2ம் ஜான் பால் வருகிற மே மாதம் ஒன்றாந்தேதி முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்படவிருக்கிறார் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். இவ்வேளையில் அவரது ஆழமானச் சிந்தனைகளை மீண்டும் நினைவுபடுத்த விரும்பி இறையடியார் திருத்தந்தை 2ம் ஜான் பாலும் பல்சமய உரையாடலும் என்ற தலைப்பில் இன்று வழங்குகிறோம். 2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி இறைபதம் அடைந்த திருத்தந்தை 2ம் ஜான் பால் தமது சுமார் 27 வருட பாப்பிறைப் பணியில் 104 வெளிநாட்டுத் திருப்பயணங்களை மேற்கொண்டார். இந்தியா மற்றும் இலங்கைக்கு அவர் பயணம் மேற்கொண்ட போது பல்சமயத் தலைவர்களைச் சந்தித்து அவர் ஆற்றிய உரைகளை இன்று தருகிறோம். இதனை எழுதி வழங்குகின்றவர் அருட்பணி ஜூட் ஆன்டனி, சிவகங்கை மறைமாவட்டம். RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.