2011-04-04 17:00:10

கர்தினால் மார் வர்கி விதயத்திலின் மரணத்திற்கு பாரத குடியரசுத் தலைவரின் இரங்கற் செய்தி


ஏப்ரல் 04, 2011 இந்தியாவின் சீரோ மலபார் ரீதி கத்தோலிக்க சபையின் தலைவர் கர்தினால் மார் வர்கி விதயத்தில் இறைபதம் சேர்ந்ததையொட்டி தன் இரங்கற்செய்தியை இந்திய கத்தோலிக்கர்களுக்கு வழங்கியுள்ளார் பாரத குடியரசுத்தலைவர் பிரதீபா பட்டீல்.
எர்ணாகுளம்-அங்கமலி உயர்மறைமாவட்டத்தின் பேராயராய் இருந்த இவரின் மரணம் குறித்து ஆழ்ந்த கவலையுடன் அறிய வந்துள்ளதாகவும், தன் அனுதாபங்களைச் சீரோ மலபார் ரீதி கத்தோலிக்கர்களுக்கும், குறிப்பாக அவர் சார்ந்திருந்த உலக இரட்சகர் சபைக்கும் தெரியப்படுத்துவதாகவும் தன் தந்திச்செய்தியில் கூறியுள்ளார் இந்தியக்குடியரசுத்தலைவர்.
குடியரசுத்தலவர் பிரதீபா பட்டீலின் இந்த இரங்கற்செய்தி, இந்திய ஆயர் பேரவைத்தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இம்மாதம் முதல் தேதி காலமான கர்தினால் வர்கி விதயத்திலின் அடக்கச் சடங்கு 10ந் தேதி ஞாயிறன்று கொச்சியில் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.