முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கென 11 பேரின் விபரங்கள் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டன
ஏப்.02,2011. கேரளாவின் சங்கணாச்சேரி மறைமாநில முதல் ஆயரும் கேரளாவின் திருநற்கருணை ஆராதனை
சகோதரிகள் சபையை நிறுவியவருமான இறையடியார் தாமஸ் குரியாலாச்சேரி (Thomas Kurialacherry)
உட்பட நான்கு இறையடியார்கள், ஐந்து வணக்கத்துக்குரியவர்கள் மற்றும் இரண்டு மறைசாட்சிகளை
முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கென அவர்கள் குறித்த விபரங்கள் திருத்தந்தையிடம்
இச்சனிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டன. இத்தாலியக் குருக்களான Serafino Morazzone, Clemente
Vismara, இத்தாலிய அருட்சகோதரிகள் Elena Aiello, Enrica Alfieri, ஸ்பெயினின் அருட்சகோதரி
Maria Caterina Irigoyen Echegaray ஆகிய வணக்கத்துக்குரியவர்களின் பரிந்துரைகளால் புதுமைகள்
நடந்துள்ளன. பிரான்சின் மறைசாட்சி Pietro-Adriano Toulorge, ஸ்பெயினின் மறைசாட்சிகள்
குரு Francesco Stefano Lacal, பொதுநிலையினர் Castán San José மற்றும் 21 பேரின் பெயர்களும்
திருத்தந்தையிடம் பரிந்துரைக்கப்பட்டன. கேரளாவின் ஆயர் தாமஸ் குரியாலாச்சேரி, கானடாவின்
கிறிஸ்தவ சகோதரர்கள் சபைத் துறவி Adolfo Châtillon, இத்தாலியின் அருட்சகோதரிகள் Maria
Chiara, Maria Dolores Inglese, Irene Stefani, ஜெர்மனியின் பொதுநிலை விசுவாசி Bernardo
Lehne ஆகிய இறையடியார்களின் வீரத்துவமான புண்ணிய வாழ்க்கை குறித்த விபரங்கள் திருத்தந்தையிடம்
சமர்ப்பிக்கப்பட்டன. இவர்கள் குறித்த விபரங்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்தும் நடவடிக்கைகளுக்குப்
பொறுப்பானத் திருப்பீடப் பேராயத் தலைவரான கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ திருத்தந்தையிடம்
சமர்ப்பித்தார்.