எய்ட்ஸ் நோயைக் க்டடுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா.பொதுச்செயலர் வேண்டுகோள்
ஏப்.01,2011: உலகில் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு நாடுகள் தைரியமுடன் நடவடிக்கைகளை
எடுக்குமாறு ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் உலகத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டார். உலகில்
எய்ட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டு முப்பது ஆண்டுக்ள் ஆகியிருக்கும் வேளை வருகிற ஜூனில்
இவ்விவகாரம் குறித்து ஐ.நா. பொதுஅவை கூடவிருப்பதையொட்டி வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில்
இவ்வாறு கேட்டுள்ளார் மூன். 182 நாடுகளில் எடுத்த ஆய்வின் அடிப்படையில் இவ்வறிக்கைத்
தயாரிக்கப்பட்டது. 2001க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த
22 நாடுகள் உட்பட 33 நாடுகளில் இந்நோய்க் கிருமிகளால் புதிதாகத் தாக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கைக் குறைந்தது 25 விழுக்காடு குறைந்துள்ளதாக அவ்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. 2010ம்
ஆண்டின் இறுதியில் அறுபது இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு இந்நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது