2011-03-26 15:23:21

திருப்பீடத் தூதர் பேராயர் பிராங்கோ : வன்முறைகள் நமது சூழ்நிலையை மேலும் குழப்பமான நிலைக்கு இட்டுச் செல்லும்


மார்ச்26,2011: வன்முறை ஒரு பொழுதும் பிரச்சனைக்கானத் தீர்வாக அமையாது, மாறாக, இது சூழ்நிலையை மேலும் குழப்பமான நிலைக்கு இட்டுச் செல்லும் என்று இஸ்ரேல் மற்றும் சைப்ரசுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் அந்தோணியோ பிராங்கோ கூறினார்.
இச்செவ்வாயன்று எருசலேமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்துப் பேசிய பேராயர் பிராங்கோ, ஓரிடத்தில் பதட்டநிலை நிலவும் போது, யாராவது ஒருவர் இத்தகைய வன்செயல்களை நடத்திச் சூழ்நிலையை மேலும் மோசமாக்குவதையும் துன்பங்களையும் வேதனையையும் பெருக்குவதையும் எப்பொழுதும் காண முடிகின்றது என்றார்.
எருசலேமில் மார்ச் 23ம் தேதி இடம் பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் சுமார் 40 பேர் காயமடைந்தனர் மற்றும் ஒருவர் இறந்தார்.
எருசலேம் இலத்தீன் ரீதிப் பேராயர் Fouad Twalம் இச்செயலைக் கண்டித்திருப்பதோடு, செபம், அமைதி மற்றும் திருப்பயணத்தின் புனித நகரம் என்ற எருசலேமின் பெயரை மேன்மைப்படுத்துவதற்கு எல்லா வழிகளிலும் முயற்சிகள் எடுக்கவிருப்பதாகக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.