2011-03-26 15:19:52

திருத்தந்தை: கடவுளுக்கும் மற்றவருக்கும் மிகுந்த நெருக்கமாக வருவதற்கு வேலை உதவுகிறது


மார்ச்26,2011: இத்தாலியின் தெர்னி-நார்னி-அமேலியா மறைமாவட்டத்தின் இரும்புத் தொழிற்சாலைக்குத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் சென்றதன் முப்பதாம் ஆண்டை முன்னிட்டு அம்மறைமாவட்ட விசுவாசிகளை இச்சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இன்றையப் பொருளாதார நெருக்கடியில் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் வேலைவாயப்பின்மை உள்ளிட்ட பல பிரச்சனைகளைக் குறிப்பிட்டார்.
நற்செய்தியின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதிலும் மனித மாண்பும் நீதியும் நிறைந்த ஒரு சமூகத்தை அமைப்பதிலும் திருச்சபைக்கு இருக்கும் பணியைத் தான் நன்கு அறிந்திருப்பதாகத் தெரிவித்த திருத்தந்தை, திருநற்கருணை இந்த உலகை மீட்கும் சக்தியைக் கொண்டது என்றார்.
ஞாயிறு திருப்பலியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொன்ன திருத்தந்தை, தொழிலில் மனிதன் மையப்படுத்தப்பட வேண்டும் என்றும், கடவுளுக்கும் மற்றவருக்கும் மிகுந்த நெருக்கமாக வருவதற்கு வேலை உதவுகின்றது என்றும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.