2011-03-26 15:28:55

ஐவரி கோஸ்ட் வன்முறைகளில் சுமார் பத்து இலட்சம் பேர் புலம் பெயர்வு


மார்ச்26,2011: ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் பதவி விலக வேண்டிய அரசுத்தலைவர் ஆட்சியை விட்டுக் கொடுக்க மறுப்பதைத் தொடர்ந்து பல மாதங்களாக இடம் பெற்று வரும் வன்முறைகளில் சுமார் பத்து இலட்சம் பேர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐ.நா.உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறினார்.
பதவி விலக மறுக்கும் அரசுத்தலைவர் Laurent Gbagboவின் ஆதரவாளர்கள் அப்பாவி பொது மக்களுக்கு எதிராகக் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதால் மக்களின் வாழ்க்கை கடுமையாயப் பாதிக்கப்ப்டடுள்ளது என்று ஐ.நா.அமைதி காக்கும் படைகளுக்கானப் பொதுச் செயலரின் உதவியாளர் Atul Khare, ஐ.நா.பாதுகாப்பு அவையில் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சனையால் 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் லைபீரியாவுக்கும் இன்னும் பத்து இலட்சம் பேர் வரை நாட்டுக்குள்ளேயே புலம் பெயர்ந்தும் இருக்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.