2011-03-25 15:41:45

மியான்மாரின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கத்தோலிக்க நிறுவனங்கள் உதவி


மார்ச்25,2011. மியான்மாரின் வடகிழக்கிலும் தாய்லாந்தின் வடக்கிலும் இடம் பெற்ற தொடர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கத்தோலிக்க நிறுவனங்கள் உதவி செய்யும் பணியில் உடனடியாக ஈடுபட்டுள்ளன.
மியான்மாரின் Kengtung ல் இவ்வெள்ளி அதிகாலை 6.8 ரிக்டர் அளவில் இடம் பெற்ற நிலநடுத்தில் குறைந்தது 75 பேர் இறந்துள்ளனர். முதலில் தாய்லாந்தின் பாங்காக்கில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. பின்னர் மியான்மாரில் இடம் பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
Kengtung மறைமாவட்ட சமூகப்பணி மையம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதில் முனைந்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.