புனித வெள்ளி சிலுவைப்பாதைத் தியானச் சிந்தனைகள் முழுவதையும் ஒரு பெண் தயாரிக்கிறார்
மார்ச்25,2011. இவ்வாண்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழிநடத்தும் புனித வெள்ளி சிலுவைப்பாதைத்
தியானச் சிந்தனைகள் முழுவதையும் ஒரு பெண் தயாரிக்கிறார் என்று திருப்பீடப் பத்திரிகை
அலுவலகம் அறிவித்தது. வருகிற ஏப்ரல் 22ம் தேதி உரோம் கொலோசேயத்தில் திருத்தந்தை
வழி நடத்தும் இந்தச் சிலுவைப்பாதைத் தியானச் சிந்தனைகளை உரோம் புனித அகுஸ்தீன் அடைபட்ட
துறவுமடங்கள் கூட்டமைப்பின் தலைவர் அன்னை மரிய ரீட்டா பிச்சியோனே எழுதுகிறார் என்றும்
கூறப்பட்டுள்ளது. உரோமையில் Santi Quattro Coronati என்ற துறவு இல்லத்தில் இவர் வாழ்கிறார். இதற்கு
முன்னர் 1993ம் ஆண்டில் மதர் அன்னமரியா கனோப்பியும் 1995ல் சுவிட்சர்லாந்து நாட்டு அருட்சகோதரி
Minke de Vriesம் இந்தத் தியானச் சிந்தனைகளைத் தயாரித்தனர். மேலும், இறையடியார் திருத்தந்தை
இரண்டாம் ஜான் பால் காலத்தில் 14 பத்திரிகையாளர்கள் இந்தத் தியானச் சிந்தனைகளைத் தயாரித்த
போது அவர்களில் பெண் பத்திரிகையாளர்களும் பங்கு பெற்றிருந்தனர்.