2011-03-24 14:28:43

யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு புது டில்லி நீதி மன்றம் அனுமதி


மார்ச் 24,2011. போபால் நச்சு வாயு விபத்தில் பல வழிகளிலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள Union Carbide நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு புது டில்லி நீதி மன்றம் CBI அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
1984ம் ஆண்டு மத்தியபிரதேசத்தில் உள்ள போபாலில் 40 டன் அளவு நச்சு வாயு Union Carbide தொழிற்சாலையில் இருந்து வெளியேறியதால் இது வரை 25,000 மக்களுக்கும் மேல் இறந்துள்ளனர் மற்றும் அப்பகுதியில் உள்ள நிலம், தண்ணீர் அனைத்தும் நச்சு கலந்ததாய் மாறியுள்ளன.
இந்த விபத்து தொடர்பாக ஆண்டர்சன் கைது செய்யப்பட்டார். எனினும், அவர் ஜாமீனில் விடுதலை பெற்று அமெரிக்கா சென்றுவிட்டார். 1992ம் ஆண்டு அவர் இவ்வழக்கில் தேடப்படும் குற்றவாளி என்று தீர்ப்பு வெளியானாலும், இதுவரை எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
CBI மேற்கொண்ட இந்த வழக்கில் ஆண்டர்சனுக்கு எதிராகத் தகுந்த ஆதாரங்கள் இருப்பதால், அவ்வதிகாரிகள் அளித்த விண்ணப்பத்தின் பேரில் ஆண்டர்சனை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு டில்லி நீதி மன்றம் இச்செவ்வாயன்று உத்திரவிட்டுள்ளது.
இந்த நச்சு வாயு வழக்கில் துவக்கத்திலிருந்தே மத்திய பிரதேச தலத்திருச்சபை மக்கள் சார்பில் உழைத்து வருவது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.