2011-03-24 14:29:32

புனித பூமியில் மீண்டும் வன்முறை


மார்ச் 24,2011. கடந்த சில மாதங்களாய் அமைதியில் இருந்த புனித பூமியில் இச்செவ்வாயன்று மீண்டும் வன்முறை தலைதூக்கியுள்ளது.
இச்செவ்வாய் பிற்பகல் வேளையில் எருசலேமில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் வெடித்த சக்திவாய்ந்த வெடிகுண்டால் இரு பேருந்துகள் அழிந்தன. இறந்தோரின் எண்ணிக்கை சரிவரத் தெரியவில்லையெனினும், இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, இப்புதனன்று இஸ்ரேல் படையினரால் Gaza பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மூன்று குழந்தைகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர், மற்றும் 12 பேர் காயமடைந்தனர்.
இந்த வன்முறைகள் களையப்படவேண்டும், முக்கியமாக, அப்பாவி மக்கள் மேல் நடத்தப்படும் அனைத்துத் தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் செய்தி அனுப்பியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.