2011-03-24 14:30:24

நேபாளத்தில் கல்லறை நிலம் கேட்டு கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்


மார்ச் 24,2011. நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் ஏறத்தாழ ஆயிரம் கத்தோலிக்கரும், கிறிஸ்தவர்களும் ஒன்று கூடி, இறந்தோரைப் புதைப்பதற்கு, தங்களுக்கு கல்லறை நிலம் வேண்டும் என்று இப்புதனன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இறந்தோரைத் தகனம் செய்யும் வழக்கம் கொண்ட இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நேபாளத்தில், கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் கல்லறை நிலம் தேவை என்று பல ஆண்டுகள் போராடி வந்ததால், அவர்களுக்கு ஒரு இந்துக் கோவிலுக்கு அருகேயுள்ள வனப்பகுதியை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ஒதுக்கித் தந்தது.
இப்பகுதியில் இறந்தோரைப் புதைக்கக் கூடாதென்று கோவில் நிர்வாகிகள் தடை செய்துள்ளதால், இப்புதனன்று போராட்டம் நிகழ்ந்தது.
போராட்டத்தைத் தொடர்ந்து, இவ்வெள்ளிக் கிழமைக்குள் புதிய ஒரு இடத்தை ஒதுக்கித் தருவதாக நேபாள அரசு அறிவித்துள்ளதென்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.