புனித பேட்ரிக் திருநாளையொட்டி அயர்லாந்து ஆயர்கள் விடுத்துள்ள அறிக்கை
மார்ச் 17,2011. நாடு விட்டு நாடு சென்று உழைத்த புனித பேட்ரிக் போல, இன்றைய உலகில் வாழும்
அயர்லாந்து மக்களும் பொருளாதாரச் சரிவு போன்ற பல்வேறு காரணங்களால் நாடு விட்டு நாடு சென்று
வாழவும், உழைக்கவும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று அயர்லாந்து ஆயர்கள் கூறியுள்ளனர். மார்ச்
17 இவ்வியாழனன்று கொண்டாடப்படும் அயர்லாந்து பாதுகாவலரான புனித பேட்ரிக்கின் திருநாளையொட்டி
ஆயர்கள் விடுத்துள்ள ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர். பொருளாதார நிர்ப்பந்தங்களால்
தங்கள் பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்களை விட்டு பிற நாடுகளில் பணிபுரியும் இளையோரைச்
சிறப்பாக இந்நாளில் நினைவு கூறுவோம் என்று புலம்பெயர்ந்தோருக்கான அயர்லாந்து ஆயர் பேரவை
பணிக்குழுவின் தலைவரான ஆயர் Seamus Hegarty கூறியுள்ளார். இப்பொருளாதாரச் சரிவிலிருந்து
அயர்லாந்தை மீட்டு, வெளிநாடுகளில் பணிபுரியச் சென்றுள்ள பலரையும் மீண்டும் தங்கள் குடும்பங்களுடன்
இணைக்கும் பணியில் அரசும் ஈடுபடும் என்ற தன் நம்பிக்கையையும் தெரிவித்தார் ஆயர் Hegarty.