மார்ச் 17,2011. நேபாளத்தில் சிறுபான்மை மதத்தினர், முக்கியமாக கிறிஸ்தவர்கள் பாதுக்காப்பின்றி
உள்ளனர் என்று அந்நாட்டில் உள்ள கிறிஸ்தவர்கள் கூறியுள்ளனர். நேபாளத்தில் உள்நாட்டு
விவகாரங்களுக்கான அமைச்சர் பதவி காலியாக இருப்பதால், உள்நாட்டு சட்டம் ஒழுங்கு ஆகியவை
உறுதியாக இல்லையென்றும் இதனால் அந்நாட்டில் கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு நலிந்து வருகிறதென்றும்
கிறிஸ்தவ சபையொன்றின் ஆயர் Narayan Sharma கூறினார். நேபாள அரசு பல்வேறு வழிகளிலும்
பாதுகாப்பு அளிக்க முயன்றாலும், கிறிஸ்தவர்கள் கோவில்களுக்கு வருவது குறைந்து வருகிறது
என்று காத்மாண்டுவில் உள்ள மரியன்னை விண்ணேற்பு ஆலயத்தில் பணி புரியும் அருள்தந்தை இராபின்
இராய் கூறினார். நேபாள பாதுகாப்புப் படை என்ற இந்து அடிப்படைவாதக் குழுவினரால் கிறிஸ்தவ
கோவில்கள், நிறுவனங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன என்றும், இந்த அடிப்படை வாதக் குழுவின்
தலைவன் Ram Prasad Mainali சிறையில் அடைக்கப்பட்டாலும், அங்கிருந்தே அவன் பல்வேறு தாக்குதல்களுக்குத்
திட்டமிட்டுள்ளான் என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.