2011-03-17 15:56:59

ஜப்பானிய ஆயர்கள், காரித்தாஸ் அமைப்பு மற்றும் பல்வேறு துறவறச் சபைகளின் அவசரக்காலக் கூட்டம்


மார்ச் 17,2011. அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் பல கிறிஸ்தவர்களையும் இழந்துள்ளோம் அவர்களின் எண்ணிக்கை இன்னும் சரிவரத் தெரியவில்லை என்று Sendai மறைமாவட்ட ஆயர் Martin Tetsuo Hiraga கூறினார்.
நிலநடுக்கம், சுனாமி மற்றும் அணுக்கதிர் வீச்சின் தாக்கங்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள Sendaiயில் இப்புதனன்று ஜப்பானிய ஆயர்கள், காரித்தாஸ் அமைப்பு மற்றும் பல்வேறு துறவறச் சபைகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அவசரக் காலக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
உடனடி உதவிகளுக்கானப் பணி மையம் ஒன்று Sendaiயில் அமைக்கப்படவும், அதன் வழியாகச் செயல்படும் காரித்தாஸ் அமைப்பிற்கு பிற கத்தோலிக்க அமைப்புக்களும், துறவறச் சபைகளும் உறுதுணையாக இருக்கும் என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதென்று ஜப்பான் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் அருள்தந்தை Daisuke Narui கூறினார்.
நிலநடுக்கம், சுனாமி தாக்கியப் பகுதிகளில் உழைத்து வந்த குருக்கள் துறவறத்தார் ஆகியோரில் இதுவரை கனடா நாட்டைச் சேர்ந்த அருள்தந்தை Andre Lachapelle என்ற மறைபணியாளர் இறந்துள்ளார் என்றும், மேலும் மூன்று குருக்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.
இயற்கைப் பெரிடராலும், அணுக்கதிர் வீச்சின் அபாயத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு துறவறச் சபையும் தங்கள் சபையைச் சார்ந்தவர்களுடன் தொடர்பு கொண்டு வருகின்றன என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.