பாத்திமா அன்னை திருத்தலத்தில் இறையடியார் இரண்டாம் ஜான்பால் நினைவுக் கொண்டாட்டம்
மார்ச் 16,2011. இறையடியார் இரண்டாம் ஜான்பால் முத்திபேறு பெற்றவராய் உயர்த்தப்படும்
தருணத்தைப் போர்த்துக்கல் நாட்டில் மே மாதம் 13ம் தேதி பாத்திமா அன்னை திருநாளன்று கொண்டாடப்
போவதாக போர்த்துக்கல் ஆயர் பேரவை அறிவித்துள்ளது. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
போர்த்துக்கல்லில் உள்ள பாத்திமா அன்னையின் திருத்தலத்திற்கு மும்முறை சென்றுள்ளார்.
1981ம் ஆண்டு பாத்திமா அன்னை திருநாளன்று உரோமையில் புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில்
அவர் மீது கொலை முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டு, அவர் அதிலிருந்து தப்பித்தார். அதற்கடுத்த
ஆண்டு 1982ல் அதே பாத்திமா அன்னை திருநாளன்று அவர் அத்திருத்தலத்திற்கு முதல் முறையாக
சென்று நன்றி செலுத்தினார். அவர் தலைமைப் பொறுப்பில் இருந்த பொது, 1991 மற்றும் 2000
ஆகிய ஆண்டுகளில் மீண்டும் பாத்திமா அன்னையின் திருத்தலத்திற்கு திருப்பயணங்கள் மேற்கொண்டார்.மே
மாதம் முதல் தேதியன்று முத்திபேறு பெற்றவராக இறையடியார் இரண்டாம் ஜான்பால் உயர்த்தப்பட்டபின்,
அப்பெருமையைக் கொண்டாட மே மாதம் 13ம் தேதி பாத்திமா அன்னையின் திருத்தலத்தில் போர்த்துக்கல்
மக்கள் கூடிவருவது பொருத்தமான ஒரு நிகழ்ச்சி என்று திருத்தலத்தின் அதிபர் அருள்தந்தை
Virgilio Antunes கூறினார்.