2011-03-15 15:44:21

பிரான்சில் காலியாக இருக்கும் கிறிஸ்தவ ஆலயங்களை முஸ்லீம்கள் செபிப்பதற்கு விண்ணப்பம்


மார்ச்15,2011: பிரான்சில் காலியாக இருக்கும் கிறிஸ்தவ ஆலயங்களை முஸ்லீம்கள் செபிப்பதற்கு வழங்குமாறு முஸ்லீ்ம் குழு ஒன்று கேட்டிரு்ப்பதாக ஆசியச் செய்தி நிறுவனம் கூறுகிறது.
பிரான்ஸ் ஆலய நிர்வாகத்திற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு ஒரு முஸ்லீம் குழு அனுப்பிய கடிதத்தில், காலியான ஆலயங்களை முஸ்லீம்கள் செபிப்பதற்கு வழங்குவதன் மூலம் முஸ்லீம்கள் தெருக்களில் செபிப்பதையும் அரசியல்வாதிகள் பிணையல் கைதிகளாக இருப்பதையும் தடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த ஒரு செய்தி நிறுவனம், எகிப்திலும் அல்ஜீரியாவிலும் கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் செபம் செய்வதற்கு மசூதிகளைக் கேட்டால் என்னவாகும்.
எனவே ஐரோப்பாவில் அதிகரித்து வரும் மோதல்களைத் தவிர்ப்பதற்கு இசுலாம், மனரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் மேற்கத்தியவர்களாக மாற வேண்டிய தேவை இருக்கின்றது என்றும் கூறியது.







All the contents on this site are copyrighted ©.