2011-03-15 15:37:43

ஜப்பானில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசிய நாடுகள் உதவி


மார்ச்15,2011: ஜப்பானில் கடும் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசிய நாடுகளிலுள்ள சமய மற்றும் மனிதாபிமான நிறுவனங்கள் நன்கொடைகள் வழங்கி உதவி செய்து வருகின்றன.
ஜப்பான் காரித்தாஸ் தலைவர் ஆயர் Isao Kikuchi வுக்குச் சீனாவின் வடக்கு ஹெபெய் மாநில கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு, சீனக் கத்தோலிக்கர்களின் சார்பாக ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளதோடு, முதல் கட்டமாக பத்தாயிரம் டாலர் அடையாள நிதியுதவியையும் வழங்குவதாகக் கூறியுள்ளது.
தென் கொரியத் தலைநகர் செயோல் கர்தினால் Nicholas Cheong Jin-sukம் ஜப்பானிய மக்களுடனான ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளதோடு, தனது உயர்மறைமாவட்டம் ஐம்தாயிரம் டாலர் அவசர நிதியுதவியையும் வழங்குவதாகக் கூறியுள்ளார்.
ஜப்பானுடன் நீண்டகாலமாகப் பகைமையுடன் இருக்கும் தென் கொரிய அரசும் 102 பேர் கொண்ட அவசரகால மீட்புப்பணிக் குழுவை ஏற்கனவே அனுப்பியுள்ளது. கொரிய புத்தமதத்தின் Jogye அமைப்பும் சுமார் 89 ஆயிரம் டாலர் உதவியுடன் 500 தன்னார்வப் பணியாளர்களையும் அனுப்பியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.