2011-03-15 15:51:55

கருக்கலைப்பு மாத்திரைக்கு கடுமையான சட்டம்


மார்ச்15,2011: கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தெரிந்து கொள்ளவும், கருக்கலைப்பிற்கான மாத்திரை பெறுவதிலும் கடுமையான விதிமுறைகளைக் கொண்டுவர இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாட்டின் பல மாவட்டங்களில் ஆண், பெண் சதவீத வேறுபாடு பெரியளவில் காணப்படுகிறது. "சோனோகிராபி' மூலம், முன்பு கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தெரிந்து கருக்கலைப்பு செய்து வந்தனர். இதைத் தடுக்க அரசு விதிமுறைகளைக் கொண்டு வந்தது. ஆனால், தற்போது புதிய தொழில்நுட்பங்கள் வந்து விட்டதால், சட்டதிட்டங்களை கடுமையாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய பொது சுகாதாரத் துறை அமைச்சர் சுரேஷ் ஷெட்டி தலைமையில் டில்லியில் நடந்த கூட்டத்தில், மருத்துவர்கள் மூன்று படிம மருந்து சீட்டை வழங்க வேண்டும். கருக்கலைப்பு மாத்திரை இருப்பு பற்றி மருந்துக் கடையினர் தெரிவிக்க வேண்டும். யாருக்கு மாத்திரை வழங்கப்பட்டது என்பது தொடர்பான முழு தகவலையும் வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.