இலங்கைத் திருச்சபையில் தவக்காலம் : “கிறிஸ்துவே நமது நம்பிக்கை”
மார்ச்15,2011: பல ஆண்டுகளாக போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் ஒப்புரவுப் பாதையில்
செல்வதற்கு “கிறிஸ்துவே நமது நம்பிக்கை” என்ற எண்ணத்தில் வளருவது முக்கியம் என்று தனது
தவக்காலச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர். இம்மாதம் 9ம் தேதி
தொடங்கியுள்ள தவக்காலத்திற்கென இலங்கை காரித்தாஸ் முன்வைத்துள்ள, “கிறிஸ்துவே நமது நம்பிக்கை”
என்ற தலைப்பையே தனது மறைமாவட்டத்திற்கும் எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார் Kurunegala ஆயர்
Harold Anthony Perera,. முப்பது ஆண்டுகள் வன்முறை மற்றும் துன்பத்திற்குப் பின்னர்
ஒப்புரவை நோக்கிச் செல்வதற்கு “கிறிஸ்துவே நமது நம்பிக்கை” என்ற தலைப்பைத் தவிர வேறு
எதுவும் பொருத்தமாக இருக்காது என்றும் ஆயர் பெரேரா கூறியுளி்ளார்