2011-03-14 15:33:32

சுனாமி ஆழிப்பேரலைகளால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மக்களுக்கு திருத்தந்தையின் ஆறுதல்


மார்ச் 14, 2011. ஜப்பானின் சுனாமி ஆழிப்பேரலைகளின் பாதிப்பு, நம்மை ஆழமாக அசைத்துப் பார்த்துள்ளது என்று கூறிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அந்நாட்டு மக்களுடன் தன் ஆன்மீக நெருக்கத்தை புதுப்பிப்பதாகவும் தன் ஞாயிறு மூவேளை ஜெப உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.
இந்த இயற்கைப் பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும், இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தன் ஜெபங்களை வழங்குவதாக உரைத்த திருத்தந்தை, இச்சூழலில் உதவி புரிய முன் வந்திருக்கும் அனைவருக்கும் தன் ஊக்கத்தை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
இதனால் பாதிக்கப்பட்டுள்ளோர் ஆறுதலைப் பெறவும், உதவிப்பணிகளில் ஈடுபட்டுள்ளோர் மேலும் உறுதியையும் பலத்தையும் பெறவும் அனைவரின் ஜெபத்திற்காகவும் அழைப்பு விடுத்தார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.