2011-03-14 15:39:57

இந்தியாவில் ஒரு நாளைக்கு இரு விவசாயிகள் வீதம் தற்கொலை.


மார்ச் 14, 2011. கடன் தொல்லை காரணமாக இந்தியாவில் 12 மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
"15 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் இந்த அவலநிலையைப் போக்க, மத்திய, மாநில அரசுகள் பெரிய அளவில் திட்டம் எதையும் செயல்படுத்தவில்லை ' என, விவசாய நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தேசிய குற்றப் பிரிவு ஆவணத்தில், " இந்தியாவில் கடந்த 1997ல் இருந்து, இதுவரை இரண்டு லட்சத்து 16 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து, உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளில் நடந்த விவசாயிகள் தற்கொலைகளை கணக்கில் எடுத்துப் பார்த்தால், 12 மணி நேரத்துக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். அதாவது, தினமும் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய விவசாய அமைச்சராக பதவி வகிக்கும் சரத் பவாரின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள விதர்பாவில்தான், விவசாயிகள் தற்கொலை அதிகம் நடக்கிறது எனவும், மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக, ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை அதிகம் இடம்பெறுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..








All the contents on this site are copyrighted ©.