2011-03-12 15:05:54

ஹைதராபாத் உயர்மறைமாவட்டத்திற்குப் புதிய பேராயர்


மார்ச் 12,2011: இந்தியாவின் ஹைதராபாத் உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக இதுவரை வாரங்கல் மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றிய ஆயர் தும்மா பாலா அவர்களை இச்சனிக்கிழமை நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத் உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயர் தும்மா பாலா, ஆந்திராவின் நரிமெட்டா என்ற ஊரில் 1944ம் ஆண்டு பிறந்தவர். 1970ம் ஆண்டு குருவான இவர், 1986ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி வாரங்கல் மறைமாவட்டத்தின் ஆயராகப் பொறுப்பேற்றார்.
ஹைதராபாத் உயர்மறைமாவட்டத்தின் பேராயராக 2000மாம் ஆண்டு சனவரியில் பொறுப்பேற்ற பேராயர் ஜோஜி மாரம்புடி (Joji Marampudi) தனது 67வது வயதில் 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி இறைபதம் அடைந்ததைத் தொடர்ந்து அப்பேராயர் இடம் இந்நாள்வரைக் காலியாக இருந்தது.
1886ம் ஆண்டு மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டு 1953 ம் ஆண்டு உயர்மறைமாவட்ட உயர்த்தப்பட்ட ஹைதராபாத் உயர்மறைமாவட்டத்தில் 90 ஆயிரம் கத்தோலிக்கர் உள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.