கல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் வாரிசுரிமை ஆயர் தாமஸ் டி சூசா
மார்ச் 12,2011. கல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் வாரிசுரிமை ஆயராக, இதுவரை பாக்டோக்ரா (Bagdogra)
மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றிய ஆயர் தாமஸ் டி சூசா அவர்களை இச்சனிக்கிழமை நியமித்துள்ளார்
திருத்தந்தை. கல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் வாரிசுரிமை ஆயர் தாமஸ் டி சூசா, பாக்டோக்ரா
மறைமாவட்டத்தின் முதல் ஆயராக 1998ம் ஆண்டு பணியேற்றார். 1950ம் ஆண்டு பிறந்த இவர், 1977ல்
குருவாகவும் 1998ல் ஆயராகவும் திருநிலைபடுத்தப்பட்டார்.