இந்தோனேசியா : தவக்காலத்தில் நோன்பிலும் தன்மறுப்புச் செயல்களிலும் ஈடுபட பேராயர் அழைப்பு
மார்ச் 12,2011: இந்தத் தவக்காலத்தின் நாற்பது நாட்களும் விசுவாசிகள் நோன்பிலும் தன்மறுப்புச்
செயல்களிலும் ஈடுபடுவதன் மூலம் புனித வாரத்தில் ஆன்மீகத் தயாரிப்புடன் நுழைய முடியும்
என்று இந்தோனேசியாவின் Semarang பேராயர் Johannes Pujasumarta கூறியுள்ளார். இந்தத்
தவக்காலத்திற்கென மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்ட பேராயர் Pujasumarta, விசுவாசிகள்
தங்களது அன்றாட வாழ்க்கையில் இயேசுவின் பாலைவன அனுபவத்தை வாழுமாறு வலியுறுத்தியுள்ளார். ஒரு
வாரத்தின் ஏழு நாட்களில் தினமும் 24 மணிநேரம் கொடுக்கப்படுகின்றது, இதில் ஆன்மீகத்திற்கும்
பொருளாதாரத் தேவைகளுக்கும் இடையே சமநிலை காக்குமாறும் பேராயர் கேட்டுக் கொண்டார்.