மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி ஏற்படச் செபிக்க அழைப்பு
மார்ச் 11,2011. எகிப்து, லிபியா, டுனிசியா போன்ற நாடுகளில் அமைதி ஏற்படுவதற்காக இத்தவக்காலத்தில்
செபிக்கவும் பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டுமென மெல்கித்தேரீதி கிரேக்கக் கத்தோலிக்கத்
திருச்சபையின் முதுபெரும் தலைவர் மூன்றாம் கிரகோரியுஸ் கேட்டுள்ளார். இந்த ஆண்டு தொடங்கியது
முதல் சில அரபு நாடுகளில் எழுந்துள்ள கிளர்ச்சிகள் பற்றித் தனது தவக்காலச் செய்தியில்
குறிப்பிட்டுள்ள அவர், அந்நாடுகளின் மக்கள் துன்பங்களிலிருந்து வெளிவந்து உயிர்ப்பைக்
காண உதவுவோம் எனக் கூறியுள்ளார்.முதுபெரும் தலைவர் மூன்றாம் கிரகோரியுஸ், சுமார் 16 இலட்சம்
கீழைரீதி கத்தோலிக்கருக்குத் தலைவராக இருக்கிறார். இவர்களில் பெரும்பாலானோர் சிரியா மற்றும்
லெபனன் நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.