ஆசியாவின் “புதிய உலகில்” கலாச்சாரத்தை வளர்க்கத் திருப்பீடம்
முயற்சி
மார்ச் 11,2011. ஆசியக் கண்டத்தில் புதியதோர் உலகம் உருவாக்கப்படவும் அப்பகுதியில் பல்வேறு
கலாச்சாரங்களுக்கு மத்தியில் புரிந்து கொள்ளுதலையும் நல்லிணக்க வாழ்வையும் ஏற்படுத்தவும்
திருப்பீடம் முயற்சித்து வருகிறது. திருப்பீடத்துக்கான 20 ஆசிய நாடுகளின் தூதர்களுடன்
இவ்வியாழனன்று கூட்டம் நடத்திய திருப்பீட கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் ஜான்பிராங்கோ
ரவாசி கலாச்சார மேம்பாட்டிற்கு பொருளாதாரத்தின் இன்றியமையாத கூறு பற்றி விளக்கினார்.ஒவ்வொரு
நாடும் பொருளாதாரத்தை வளர்க்க உதவுவதன் மூலம் கலாச்சார மேம்பாட்டிற்கு உதவ முடியும் என்றும்
அவர் கூறினார்.