நாடு கடந்த திபெத் அரசின் அரசியல் பொறுப்பிலிருந்து தலாய் லாமா விலகல்
மார்ச் 10,2011. திபெத்துக்கு வெளியே இருந்து இயங்கும் நாடு கடந்த திபெத் அரசின் அரசியல்
பொறுப்பிலிருந்து தான் விலக இருப்பதாக திபெத் புத்தமதத் தலைவர் தலாய் லாமா இவ்வியாழனன்று
அறிவித்துள்ளார். இம்மாதம் 14ம் தேதி கூடவிருக்கும் இந்த நாடுகடந்த அரசு, தலாய் லாமாவின்
இந்தத் தீர்மானம் குறித்துப் பரிசீலனை செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1959ம்
ஆண்டில் திபெத்தில் மக்கள் எழுச்சி ஏற்பட்டதன் ஆண்டு நிறைவு நிகழ்வில் தலாய் லாமா இந்த
அறிவிப்பை வெளியிட்டுள்ளார்தலாய் லாமாவும் திபெத்தியர்களும் தேர்தல்கள் மூலம் புதிய பிரதமரைதத்
தேர்ந்தெடுப்பதற்குத் தயாரித்து வரும் இவ்வேளையில் தலாய் லாமா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
என்று கூறப்படுகிறது.