போர்ச் சூழல்களில் வாழும் பெண்களைப் பாதுக்காக்கும் வழிமுறைகள் இன்னும் வலுப்படுத்தப்பட
வேண்டும் - அயர்லாந்து ஆயர்கள்
மார்ச் 09,2011. ஒவ்வொரு நாட்டிலும், உலகச் சமுதாயத்திலும் பெண்களைப் பாதுக்காக்கும்
வழிமுறைகள் இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டும், அதிலும் சிறப்பாக போர்ச் சூழல்களில் வாழும்
பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாவது நிறுத்தப்பட வேண்டுமென்று அயர்லாந்து ஆயர்கள்
கூறியுள்ளனர். இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட அகில உலக மகளிர் தினத்தின் நூற்றாண்டையொட்டி
அயர்லாந்தின் ஆயர் பேரவை வெளியிட்ட அறிக்கையில், பெண்களை மையப்படுத்தி சேவை செய்யும்
குழுவினருக்கு அரசின் அதிகப்படியான உதவிகள் கொடுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்.உலகின்
பல பகுதிகளில் இன்று போராட்டங்களும், போர் சூழலும் நிலவி வருவதும், அங்கு பெண்களின் நிலையே
மிகவும் ஆபத்தானது என்பதும் அனைவருக்கும் தெரியும் என்றாலும், இந்த ஆபத்தை நீக்க அரசுகள்
அதிகம் முயற்சிகள் எடுப்பதில்லை என்று அயர்லாந்து ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப்
பணிக்குழுவின் தலைவரும், Dublin துணை ஆயருமான Raymond Field கூறினார்.